ரஜினி ஒரு சுயநலவாதி.. ஆனால் கமல் அப்படி இல்லை - போட்டுடைத்த பிரபல இயக்குநர்
பிரபல இயக்குநர் ரஜினி மற்றும் கமல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரஜினி - கமல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இந்திய அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் திரை உலகில் பன்முகத்திறமைக் கொண்டவர்கள் பலர் இருந்தாலும், பலரிலும் தனித்து மேலோங்கி இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன்.
அவருக்கேன ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது எனலாம். தற்போது இருவரும் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கின்ற நிலையில், முன்னதாக இருவரும் இணைந்து நடித்து வந்தனர். இந்த நிலையில், ரஜினி ஒரு சுயநலவாதி என்றும் கமல் ஒரு பொதுநலவாதி என்றும் இயக்குநர் கே.ஆர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 'ரஜினி சார் ஒரு சுயநலவாதி; அவர் எப்போதும் அவர் ஜெயிக்க வேண்டும், அவரை நம்பி காசு போட்ட தயாரிப்பாளர் ஜெயிக்க வேண்டும்.
படம் வாங்கியவர்கள் ஜெயிக்க வேண்டும்.சம்பளம் சரியாக வர வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி மட்டுமே யோசிப்பார். அது அவருக்கு சரியான விஷயம்; அதனால், அதை அவர் செய்கிறார். உண்மையில் அவர் ஒரு நாளில் சுருக்கி காட்சிகளை எடுத்தால் கூட, நல்லது என்றுதான் நினைப்பார்.
ஆனால் கமல் பொதுநலவாதி. அவர் தொடர்ந்து பரிச்சாத்த முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார். அந்த படம் ஓடுகிறதோ ஓடவில்லையோ அவர் அவருக்கான பாணியில் பயணம் செய்து கொண்டே இருப்பார்.
பிரபல இயக்குநர்
குறிப்பாக, அவர் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஜெயிக்க வேண்டும் தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று யோசிப்பார். கமலுக்கும் ரஜினிக்கும் போட்டியிருப்பது உண்மைதான்.
அது எப்படி உருவானது என்றால், பஞ்சு அருணாச்சலம் ஒருமுறை இருவரையும் அழைத்து, நீங்கள் இருவரும் தனித்தனியாக படங்கள் செய்யும் பட்சத்தில், நிறைய தொழிலாளர்கள் நன்றாக இருப்பார்கள்; பொருளாதாரமும் பெருகும் என்று கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் கமல் சாரும் ரஜினி சாரும் கலந்து பேசி அந்த முடிவுக்கு வந்திரார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது; ரசிகர்கள் தான் சண்டை போட்டுக் கொள்கிறார்களே தவிர அவர்களிடம் எந்த நெருடலும் இல்லை.
நடிகர்கள் அவர்களுடைய கெரியரின் உச்சத்தை தொடும் பொழுது, அதை தக்க வைத்துக் கொள்வது என்பது மிக மிக கடினமான விஷயம். காரணம் என்னவென்றால், நடிகர்கள் கெரியரின் உச்சத்தை தொடும் பொழுது, புகழ் போதை அவர்களை தள்ளாட வைத்து,
குழப்பத்திற்குள் தள்ளிவிடும் ஆனால் அதற்குள் எல்லாம் சிக்காமல் இன்றும் தன்னை கட்டுப்படுத்தி, தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அது பெரிய விஷயம்' என்று பேசினார்.