அட பாவமே இயக்குநர் பாலாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
தமிழ் சினிமாவில் 1999 ஆண்டு சேது படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் பாலா. இத்திரைப்படத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் பெரும் பாராட்டை பெற்றார்.
இதையடுத்து இவர் எடுத்த அடுத்தடுத்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அண்மையில் இவர் தன் மனைவி முத்துமலரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றார்.
தற்போது அவர் மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சூர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார்.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றன. இத்திரைப்படத்தில் ஷெட்டியும் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சூர்யா சில மாற்றங்களை செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் வன்முறை காட்சிகள் பெரிதளவு காட்ட கூடாது,தவறான வார்த்தைகள் இருக்க கூடாது போன்ற நிபந்தனைகளை சூர்யா போட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இயக்கநர் பாலா படம் என்றால் நடிகர்கள் அவர் சொல்லும் படி நடித்து கொடுத்து போவார்கள் ஆனால் அண்மை காலமாக அவரின் படங்கள் வெற்றி பெறாததால் நடிகர்கள் போடும் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு போவதாக கூறப்படுகிறது.