நடிகையுடன் தனியாக ஹோட்டலில் தங்கிய இயக்குநர் பாலா..!

Suriya Bala
By Thahir May 17, 2022 12:16 AM GMT
Report

நடிகையுடன் தனியாக ஓட்டலில் இயக்குநர் பாலா தங்கி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாலா முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர்.

நடிகையுடன் தனியாக ஹோட்டலில் தங்கிய இயக்குநர் பாலா..! | Director Bala Staying Alone Hotel With The Actress

இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு நடக்கும் போது அந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு அருகிலேயே உள்ள ஹோட்டல்களில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அறைகள் புக் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

இதனிடையே நடிகர் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 41 வதுபடம் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா படகோட்டி வேடத்தில் நடிக்கிறார்.

இதற்காக சூர்யாவுக்கு கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் ஒரு ஹோட்டலில் அறை புக் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் சூர்யா ஈசியாக வந்து செல்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் பாலா மற்றும் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி இருவருக்கும் படப்பிடிப்பு தளத்திலிருந்து  இருந்து கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை புக் செய்துள்ளார்கள்.

கன்னியாகுமரி படப்பிடிப்பு தளத்திலிருந்து ஹோட்டல்  நாகர்கோவிலில்  அமைந்துள்ளது. இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்து தான் படப்பிடிப்பில் அவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இதனால் தற்போது மிகுந்த சிரமத்துடன் தான் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் ஏன் ஹீரோவுக்கு மட்டும் அருகில் உள்ள ஹோட்டலில் அறை புக் செய்துவிட்டு, மற்ற நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்கு எவ்வளவு தொலைதூரத்தில் ஹோட்டல் அறை  புக் செய்ய காரணம் என்ன என்று தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.