பாலா - முத்துமலருக்கு பிரிவை ஏற்படுத்திய அந்த அரசியல் வாரிசு? - வெளியான திடுக்கிடும் தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி
‘நந்தா’, ‘பிதாமகன்’, உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் பாலா.
இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு. சினிமாத்துறையுலகில் கடந்த சில மாதங்களாக முக்கிய பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகிறார்கள்.
இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இவர்கள், கடந்த 5ம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும், முத்துமலரும் 17 வருட வாழ்க்கையிலிருந்து பிரிந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இயக்குநர் பாலா-முத்துமலர் விவாகரத்து குறித்து சமூகவலைத்தளங்களில் பல தகவல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், முத்துமலர் அந்த அரசியல் தலைவரின் மகனை மீண்டும் தொடர்பு கொண்டதற்கு காரணம் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துமலருக்கும் அவருடன் கல்லூரியில் படித்த அரசியல் தலைவரின் மகனுக்கும் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த பழக்கத்தால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, விவாகரத்து வரைக்கும் கொண்டு வந்து விட்டுவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பாலாவுக்கும் மதுப்பழக்கம் அதிகம் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், பாலா சரிவர வீட்டிற்கு செல்வது கிடையாதாம். அவரை தேடி முத்துமலர் தான் வருவாராம்.
இப்படி போதையே கதி என்று இருந்துக் கொண்டிருந்த பாலாவுக்கு, பஞ்சாயத்து பேச அந்த அரசியல் வாரிசை தொடர்பு கொண்டுள்ளாராம் முத்துமலர். பஞ்சாயத்துக்கு அழைத்த நபர் கடைசியில் முத்துமலருடன் நெருக்கமாகிவிடவே அது பாலாவுக்கு பிடிக்கவில்லை.
இதனால், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டையும், தகராறும் வரவே இவர்களின் திருமண வாழ்க்கை முறிவுக்கு வந்து விட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.