பாலாவின் விவாகரத்துக்கு பின் நடந்த பாசப்போராட்டம்...கண்ணீரோடு விடைபெற்ற மகள்..!
அண்மையில் இயக்குநர் பாலாவும் அவருடைய மனைவி முத்து மலரும் விவாகரத்து செய்தனர்.
இவர்களின் விவாகரத்து பற்றி நாளுக்கு நாள் செய்திகள்,சர்ச்சையான விஷயங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் பாலாவும்,முத்து மலரும் தங்கள் விவாகரத்து பற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இதனிடையே தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் திருமண விழாவிற்கு சென்றுள்ளார் இயக்குநர் பாலா. அப்போது அவரது மனைவி முத்து மலரும் தன் மகளோடு வந்துள்ளார்.
விழாவில் தன் அப்பாவை கண்ட மகள் சந்தோஷமடைந்து அப்பாவிடம் சென்று மடியில் அமர்ந்துள்ளார். பின்னர் பாலாவும்,தன் மகளை கொஞ்சி பேசி விளையாடியுள்ளார்.
அப்போது தன் மனைவியை பாலா திரும்பி கூட பாரக்கவில்லையாம். பின்னார் விழாவில் இருந்து விடைபெறும போது தன் மகளை விட்டு பிரிய மனமில்லாமல் பாலா கண் கலங்க சென்றுள்ளார்.
இதை கண்ட அங்கிருந்தவர்கள் பலரும் அந்த நிகழ்வை கண்டு வருத்தம் அடைந்துள்ளனர்.
தன் குழந்தைகளின் எதிர்காலத்தை சற்றும் சிந்திக்காமல் உடனடியாக விவாகரத்து மன நிலைக்கு செல்லும் பெற்றோர்களால் குழந்தைகள் மனதளவில் தாய்,தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.