என் வயிறு எரியுது... நல்லாவே இருக்க மாட்டார்... இயக்குநர் பாலாவை சாபம் விட்ட பிரபல நடிகர்...! - ரசிகர்கள் ஷாக்...!
இயக்குநர் பாலாவை வயிறு எரிந்து சாபம் விட்ட பிரபல நடிகரின் பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இயக்குநர் பாலா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு.
சமீபத்தில் இயக்குநர் பாலா தன் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்த சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது. கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பாலாவை நம்பி பல கோடி இழந்த நடிகர் சூர்யா
இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணி ‘வணங்கான்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றபோது, பாலாவிற்கும், சூர்யாவிற்கும் ஏதோ சண்டை வர படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சூர்யா வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
இதன் பிறகு பாலா இப்படத்தின் கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என்பதால், சூர்யாவை ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகுவதாக பாலா அறிவித்தார். இதனையடுத்து, பதிலுக்கு நடிகர் சூர்யாவும் தங்களின் 2d நிறுவனம் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
‘வணங்கான்’ படத்தை தயாரித்த சூர்யாவிற்கு இப்படத்தினால் கிட்டத்தட்ட ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
வயிறு எரிந்து சாபம் விட்ட பிரபல நடிகர்
இந்நிலையில் ‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்த அழகன் தமிழ் மணி, பாலா குறித்து பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். இவர் சினிமா தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் அழகன் பேசுகையில்,
என் வீடு இயக்குநர் பாலாவின் ஆபிஸ் அருகே தான் உள்ளது. நான் அவரை சந்தித்தபோது, நான் கடவுள் படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறினார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.
‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பில் என் மனைவி என்னை அறைவது போன்ற காட்சி இருந்தது. அப்போது, அந்த நடிகை என்னை மெதுவாகதான் அறைந்தார். இதைப் பார்த்த பாலா, வேகமாக அறைகிறாயா அல்லது நான் உன்னை அறையட்டுமா என்று கத்தினார். உடனே, அந்த நடிகை வேகமாக என்னை அறைந்தார். இப்படியே அறை வாங்கிய நான் அந்த இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துவிட்டேன்.
இதன்பிறகு, மேலே இருந்து தண்ணீரில் குதிக்கும் காட்சியை படமாக்கப்பட்டது. அப்போது பல முறை அந்த காட்சி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தன் தண்ணீருக்குள் குதிக்கும்போது, தண்ணீருக்கு அடியில் இருந்த கற்கள் என் காலில் குத்தி காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த பாலா அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை. டேக் போய்க்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் வந்து இதோடு நான் செத்துப்போயிடணும் என்று நினைத்துதான் குதித்தேன். அந்த டேக்கைதான் ஓ.கே சொன்னார் பாலா.
நான் கடவுள் படத்தின் படப்பிடிப்பின்போது என் அம்மா இறந்துவிட்டார். அப்போது மொட்டையடித்து தாடியை மழிக்க வேண்டும் என்று கூறினேன். அப்படியெல்லாம் செய்ய முடியாது. அதையெல்லாம் செய்யாதீங்க என்று கூறிவிட்டார் பாலா.
இதனால் என் தாய்க்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட என்னால் செய்ய முடியாமல் போனது. இதனால் என் வயிறு எரிந்து பாலாவுக்கு சாபம் விட்டேன். தற்போது பாலா எந்த நிலையில் இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். இனியாவது பாலா திருந்த வேண்டும் என்று வேதனையுடன் பேசினார்.