கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இயக்குநர் பாலா - விவாகரத்திற்கு இது தான் காரணமா?
கஞ்சா பழக்கத்தால் இயக்குநர் பாலா பல இழப்புகளை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.
தமிழ் சினிமாவில் சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் போன்ற நடிகர்கள் சினிமாவில் முத்திரை பதிக்க பாலாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
பாலா கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகளையும் 15-க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இயக்குநர் பாலாவிற்கு சிறுவயதில் இருந்தே புகைப்பிடிப்பது.மது அருந்துவது,கஞ்சா அடிப்பது ஆகிய கெட்ட பழக்கங்கள் இருந்து வந்துள்ளது.
இதை அறிந்த பாலாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.இதானல் வீட்டை விட்டு வெளியேறிய அவர் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
திரைப்படங்களை இயக்கும் போதே அவர் கஞ்சா பழக்கதில் மூழ்கி இருந்தது கோலிவுட் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதனிடையே சமீபத்தில் இவரது முன்னாள் மனைவி முத்துமலர் விவாகரத்து பெற்றதற்கு முக்கியமான காரணமாக பாலாவின் கஞ்சா பழக்கம் தான் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாலாவின் கஞ்சா பழக்கத்தால் பெற்றோர்கள் முதல் உறவினர்கள் வரை யாரும் பாலாவிடம் பேச்சு வார்த்தை இல்லாமல் உள்ளனர்.
புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட பல கெட்ட பழக்கங்களை விட்டுவிட்ட பாலாவால் கஞ்சா பழக்கத்தை மட்டும் விடாமல் இருப்பதால் அவரது வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.