ரோகித் சர்மாவின் திறமை ஈடு இணையற்றது - தினேஷ் கார்த்திக் பெருமிதம்
ரோகித் சர்மாவின் திறமை ஈடு இணையற்றது என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.
20 ஓவர் போட்டி
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளன. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இத்தொடர் 6 நாட்கள் மட்டும் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டியில் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் 25ம் தேதியோடு இப்போட்டி நிறைவடைய உள்ளது.
முதல் போட்டி
கடந்த 20ம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது போட்டி
20 ஓவர் கிரிக்கெட் 2-வது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்தது. கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் பேட்டி
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது -
விக்ரம் ரத்தோர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரும் நான் எப்படி பயிற்சி செய்ய வேண்டும், என்ன ஷாட்களை பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடினார். எனக்கு 2 பந்துகள் கிடைத்தது.
அதனால் நான் என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்தேன். த்தேன். புதிய பந்திற்கு எதிராக, உயர்தர புதிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்ற ஷாட்களை ஆடுவது எளிதானது கிடையாது. ரோஹித் எவ்வளவு பெரிய வீரர் என்பதை இது காட்டுகிறது.
உலக கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் அவரது திறமை எதற்கும் இரண்டாம்பட்சமாக கிடையாது. அதுவே அவரை உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்குகிறது என்று தெரிவித்தார்.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
