Saturday, Jun 28, 2025

காவல் நிலையத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்; அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன நடந்தது?

Cricket Tamil nadu Indian Cricket Team Dinesh Karthik
By Jiyath 2 years ago
Report

வீட்டின் ஆவணங்களை காணவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

கடந்த 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார் தினேஷ் கார்த்திக். தற்போதைய இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.

காவல் நிலையத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்; அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன நடந்தது? | Dinesh Karthik Filed Complaint At Police Station I

இந்திய அணிக்காக 150க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுகிறார். தினேஷ் கார்த்திக் 2015 இல் ஸ்குவாஷ் விளையாட்டு நட்சத்திரம் தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்தார். சென்னையில் நீலாங்கரையை அடுத்த அக்கரையில் இவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.

புகார்

இந்நிலையில் அந்த வீட்டின் அசல் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்காக எடுத்துச் சென்றபோது ஆவணங்கள் தொலைந்து விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ் கார்த்திக் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.