கொடைக்கானல் - பழனி சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது
கொடைக்கானல் - பழனி சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில்.. ராட்சத பாறை உருண்டு கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது நல்லவேளையாக காரில் சென்ற கொடைக்கானல் சுற்றுலா அதிகாரி லோகநாதன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. குறிப்பாக வடகவுஞ்சி பிரிவு அருகே நிலச்சரிவின் போது சாலையின் மேற்புறத்தில் இருந்த ராட்சத பாறை பெயர்ந்து, உருண்டு விழுந்து சாலையை முற்றிலும் துண்டிக்கச் செய்துள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து ராட்சத பாறையை வெடி வைத்து தகர்த்து, அகற்றும் பணியை துவக்கியுள்ளனர்.