கமலை மிரட்டினாரா உதயநிதி ஸ்டாலின் ? - தயாரிப்பாளர் கே.ராஜன் பதில்
விக்ரம் படத்திற்காக கமலை,உதயநிதி ஸ்டாலின் மிரட்டினாரா என்ற கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பதில் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி,ஃபத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் படம் நாளை வெள்ளிக்கிழைமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது.
இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் அண்மையில் வெளியாகும் புதிய திரைப்படங்களில் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்று வெளியிட்டு வருகிறது.
விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் சில பேர் என்ன சார் கமலையே மிரட்டிட்டீங்களா படத்தையே வாங்கிட்டீங்க என்று கேட்டதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் கமலை யாராவது மிரட்ட முடியுமா? படம் இவுங்க கையில் போனால் முதலில் அருமையான தியேட்டர்கள் படத்தை திரையிடுகிறார்கள்.
கலெக்ஷன் ஒழுங்கா கட்டுகிறார்கள்,படத்தின் ஷேர் ஒரு வாரம் மற்றும் இரண்டு வாரத்தில் கொடுத்து விடுகிறார்கள்.
இது விநியோகஸ்தர்கள்,பட தயாரிப்பாளர்களுக்கு இது உண்மையிலேயே லாபம் என்றார். “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” படத்தை நல்ல தியேட்டர்களில் திரையிடுகிறார்கள்.
விளம்பரம் செய்கிறார்கள். வாரம் வந்துவிட்டால் கரெக்டா ஷேர் கணக்கு காட்டிவிடுகிறார்கள்.ஷேர் அனுப்பிவிடுகிறார்கள். படத்தை விரும்பி கொடுப்பதாகவும்,மிரட்டி எல்லாம் வாங்க மாட்டார்கள் என்று பதில் அளித்தார்.