ஐபிஎல் போட்டிகளில் தன்னை மரியாதையாக நடத்தவில்லை: கிறிஸ் கெயில் பரபரப்பு குற்றச்சாட்டு..!
ஐபிஎல் போட்டிகளில் மரியாதையாக நடத்தப்படாததால் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,பஞ்சாப் அணிகளுக்காக கிறிஸ் கெயில் விளையாடி உள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் கெயிலின் பெயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக லண்டன் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் நிர்வாகம் தன்னை முறையாக நடத்தவில்லை என்று உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல்-க்கும் கிரிக்கெட்டிற்கும் நிறைய செய்த பின்பும் மரியாதை இல்லை என்பதை உணர்ந்ததாகவும், கிரிக்கெட்டிற்கு பிறகும் வாழ்க்கை உள்ளது என்பதால் இயல்பு நிலைக்கு மாற முயற்சிப்பதாகவும் கிறிஸ் கெயில் குறிப்பிட்டுள்ளார்.