நீ எனக்கு வேண்டாம்..! நடிகை சமந்தாவுக்கு ரூ.250 கோடி கொடுத்தாரா நாக சைதன்யா
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
நோயுடன் போராடும் சமந்தா
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் பாடல் ஒன்றில் நடனம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவரின் உடல்நிலையில் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி தீயாகி பரவியது.
இதுகுறித்து நடிகை சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சமந்தா மருத்துவமனையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.
சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்து இருந்தார். இதை கேட்ட ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
விவாகரத்து
நடிகை சமந்தா நடக்க முடியாமல் வீட்டில் ஆயுர்வேத சிகிச்சையை வீட்டில் இருந்து எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர்.
தன் மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய ரூ.250 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் பிரபலமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற சமந்தா இதுகுறித்து காமெடியாக ஒரு ரூமர் பரவியதாக கூறியுள்ளார்.
நான் ஜீவனாம்சமாக 250 கோடி வாங்கியிருக்கிறேன். தினமும் என் கதைவை திறந்து காத்திருக்கிறேன், வருமானத்துறையினர் வருவார்களோ என்று எதார்த்தமாக கூறியுள்ளார். இப்படி அவர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.