சென்னை அணியில் இருந்து விடைபெற்றாரா தோனி - வெளியான முக்கிய அறிவிப்பு..!

MS Dhoni Chennai Super Kings
By Thahir May 21, 2022 06:02 AM GMT
Report

நேற்று சென்னை அணி இந்த ஆண்டின் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் இருந்து தோல்வியோடு வெளியேறியது.

இந்நிலையில் அடுத்தாண்டு சென்னை அணியில் விளையாடுவாரா தோனி என்று கேள்வி எழுந்த நிலையில் அவர் பதில் அளித்துள்ளார்.

சென்னை அணியில் இருந்து விடைபெற்றாரா தோனி - வெளியான முக்கிய அறிவிப்பு..! | Did Dhoni Say Goodbye To The Chennai Team

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் மோசமாக விளையாடியது.

இந்த தொடரின் துவக்கத்தில தோனிக்கு பதிலாக ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரின் கீழ் களம் இறங்கிய சென்னை அணி 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் பல்வேறு வீரர்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் என அனைத்திலும் மிக மோசமாக செயல்பட்டதால் 8வது போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஜடேஜாவிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது.

சென்னை அணியில் இருந்து விடைபெற்றாரா தோனி - வெளியான முக்கிய அறிவிப்பு..! | Did Dhoni Say Goodbye To The Chennai Team

பெரும் எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் சென்னை அணி மிக மோசமாக விளையாடியது.

நேற்று சென்னை அணியும்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாகவே தோனி பேசினார்.

அப்போது கண்டிப்பாக அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என உறுதி அளித்துள்ளார். கண்டிப்பாக நான் இங்கு ஓய்வை அறிவிப்பது சரியானதாக இருக்காது.

சென்னை அணியில் இருந்து விடைபெற்றாரா தோனி - வெளியான முக்கிய அறிவிப்பு..! | Did Dhoni Say Goodbye To The Chennai Team

சென்னை மண்ணில் தான் ஓய்வை அறிவிப்பேன் அதுவே சென்னை மற்றும் சென்னை ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டும் சென்னை அணியில் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்த நிலையில் ரசிகர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.