Play Off முன்பே ஓய்வு பெரும் தோனி !! மே 12 தான் கடைசி ஆட்டமா? சேப்பாக்கத்தில் தீவிரமாகும் ஏற்பாடுகள்
சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் தோனி கிரிக்கெட் வாழக்கையில் அவரது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.
தோனி
சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றுள்ள கேப்டனான தோனி, இந்த ஆண்டு தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ருதுராஜ் தலைமையில் விளையாடி வரும் சென்னை அணியில், அவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர் எப்போது retire ஆவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. முந்தைய பேட்டி ஒன்றில் பேசும் போது தோனி, எனது கடைசி சர்வதேச போட்டியை சொந்த ஊரான ராஞ்சியில் விளையாடினேன். அதேபோல எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் விளையாடுவேன் என நம்புவதாக குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு சென்னை அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி இருக்கின்றது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் KKR மற்றும் RR தலா 8 வெற்றி பெற்றுள்ளன. 3 முதல் 6 வரையிலான இடங்களில் இருக்கும் அணிகளான முறையே CSK, SRH, DC, LSG ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த 4 அணிகளில் 2 அணிகள் மட்டுமே தகுதி பெரும். தற்போது 3-ஆம் இடத்தில் சென்னை இருந்தாலும், அது ரன் ரேட் அடிப்படையில் தானே தவிர, புள்ளிகள் அடிப்படையில் இல்லை. சென்னை அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மட்டுமே சென்னையில் நடக்கவிருக்கிறது.
ஏற்பாடுகள் தீவிரம்
வரும் 12-ஆம் தேதி இந்த போட்டி நடக்கிறது. அதனை தொடர்ந்து Eliminator மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. சென்னை அணி அடுத்து சுற்று வாய்ப்பிற்கு தகுதியகுமா? என்ற கேள்வி இருக்கும் நிலையில், வரும் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆட்டம் தான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்ற கருத்து சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
சென்னை அணி eliminator சென்றால், மீண்டும் ஒரு வாய்ப்பு தோனிக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக, சென்னை குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இதில் தோற்றால் சென்னை அணி வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளதால், அப்போட்டியின் முடிவை வைத்து சென்னை மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.