வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த தோனி - ட்விட்டரில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழில் தோனி படம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் வெளியான தகவலுக்கு தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான மகேந்திர சிங் தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார் என்றும் அந்த வகையில் அவர் தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்றும் கடந்தும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் உலா வந்தன.
மேலும், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்திருப்பதாகவும் அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி தமிழகத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டது.
நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை முதல் கட்டமாக தோனி தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் அது உண்மை இல்லை என தோனி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) May 12, 2022
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், எங்கள் நிறுவனம் சஞ்சய் என்ற பெயர் கொண்ட யாருடனும் பணியாற்றவில்லை. இது குறித்து உலா வரும் அனைத்து செய்திகளும் போலியானவை அதனால் எச்சரிகையுடன் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்நிறுவனம் புதிய புராஜெக்ட்டில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.