இந்தியா முன்னாள் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

corona dhoni ipl parents
By Praveen Apr 21, 2021 11:47 AM GMT
Report

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியா அணியின் முன்னாள்கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோனியின் பெற்றோருக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவும், நாடித்துடிப்பின் அளவும் நிலையாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனில் தோனி பங்கேற்றுவிட்டு அதன்பிறகு வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வந்தார்.

அதன்பிறகு, ஐபிஎல் 14ஆவது சீசனில் பங்கேற்பதற்காக மார்ச் மாத துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவப் பாதுகாப்பு வடத்திற்குள் வந்துவிட்டார். அதன்பிறகு, அவர் பெற்றோர்களைச் சந்திக்கவில்லை.