ஐபிஎல் கிரிக்கெட்: தோனியை தொடர்ந்து ரோஹித் ஷர்மாவுக்கும் அபராதம்

cricket ipl fine mumbaiindians slow
By Praveen Apr 21, 2021 09:53 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணி வீரர்களுக்கு பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட புகாரில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித்சர்மாவுக்கு, விதிமுறைப்படி 12 லட்சம் ரூபாய் அபராம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.