“தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது” - இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு!

Shikhar Dhawan Cricket Indian Cricket Team Dinesh Karthik
By Nandhini Dec 12, 2022 10:23 AM GMT
Report

தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம் -

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் நடந்தது.

இப்போட்டியில், இந்திய அணி 410 ரன்கள் எடுத்து வங்காளதேச அணி இலங்கை நிர்ணயித்தது. இதனையடுத்து, விளையாடிய வங்காளதேச அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது.

இதனையடுத்து, இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி சார்பாக பேட்டிங் செய்ய வந்த இளம் வீரர் இஷன் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கப்பட்டார்.

ஆரம்பம் முதலே மாஸாக விளையாடிய இவர் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இவர் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து மாஸ் காட்டினார். இதனையடுத்து இவர் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.

dhawan-dinesh-karthik-cricket

தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது -

இந்நிலையில், தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், எதிர்வரும் இலங்கைக்கு எதிரான தொடரில் இஷான் கிஷனை சேர்க்காமல் இருக்க இயலாது. மறுபுறம் கில் சிறப்பாக விளையாடுகிறார். ரோஹித் அணிக்கு திரும்பினால், தவானுக்கு அணியில் இடம் இருக்காது.

தவானின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது என்றார். இதுபோல் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.