பிறந்து 7 நாளில் உயிரிழந்த பெண் குழந்தை: எருக்கம்பால் கொடுத்து கொன்ற கொடூரம்

killed dharmapuri girl baby 7 day baby grand mother arrest
By Anupriyamkumaresan Aug 14, 2021 03:14 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

 தருமபுரி அருகே பிறந்த ஏழே நாளான பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி அருகே பிறந்து ஏழே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

பிறந்து 7 நாளில் உயிரிழந்த பெண் குழந்தை: எருக்கம்பால் கொடுத்து கொன்ற கொடூரம் | Dharumapuri Girl Baby Killed By Grandmother

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல் - தேன்மொழி தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வது மற்றொரு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த குழந்தை பிறந்து ஏழே நாளில் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் குழந்தையை அடக்கம் செய்தனர். இதில் சந்தேகமடைந்த செவிலியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிறந்து 7 நாளில் உயிரிழந்த பெண் குழந்தை: எருக்கம்பால் கொடுத்து கொன்ற கொடூரம் | Dharumapuri Girl Baby Killed By Grandmother

இந்த புகாரை தொடர்ந்தே போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேன்மொழியின் தாயார் உமா பெண் குழந்தை என்பதால், குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

பிறந்து 7 நாளில் உயிரிழந்த பெண் குழந்தை: எருக்கம்பால் கொடுத்து கொன்ற கொடூரம் | Dharumapuri Girl Baby Killed By Grandmother

இதனை தொடர்ந்து, பாட்டி உமாவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.