சோகத்தில் மூழ்கிய தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன செல்வராகவன்

dhanush selvaraghavan good-news
By Nandhini Feb 01, 2022 07:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர்தான் செல்வராகவன். செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசே உள்ளது.

இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்தார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்.

இவர்கள் மூன்று பேரும் இணைந்து இதுவரை ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது, இவர்கள் கூட்டணியில் ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் மாஸ் அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் தற்போது வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர், ‘நானே வருவேன்’ படத்தின் பாடல் பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டதாகவும், இதனை வெளியிட ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் தற்போது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சமீபத்தில் தான் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக அறிவித்தனர். தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

சோகத்தில் மூழ்கி இருந்த தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 

சோகத்தில் மூழ்கிய தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன செல்வராகவன் | Dhanush Selvaraghavan Good News

சோகத்தில் மூழ்கிய தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன செல்வராகவன் | Dhanush Selvaraghavan Good News