பறிப்போன வாய்ப்பு..நடிகர் தனுஷுக்கு என்ன ஆச்சு - பிரபல நடிகர் ஓபன் டாக்..!
நடிகர் தனுஷுக்கு வந்த வாய்ப்பு பறிப்போனதால் பிரபல நடிகர் பரத் நடித்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.
இவர் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம்,நானே வருவேன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் தவறவிட்ட பட வாய்ப்பு தனக்கு வந்ததாகவும் அந்த படம் ஹிட் ஆனாதாகவும் நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
பாய்ஸ், செல்லமே, வெயில், எம் மகன், கண்டேன் காதலை போன்ற பல தரமான படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் பரத்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காளிதாஸ் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. நடிகர் பரத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் காதல்.
இயக்குநர் ஷங்கர் தயாரித்த இத்திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார்.உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பெரிய அளவில் மெகாஹிட்டானது.
இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் தனுஷ் தான் என்று பரத் தெரிவித்துள்ளார். ஒரு சில காரணங்களால் தனுஷால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக பரத் இப்படத்தில் நடித்ததாக கூறினார்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
