நேரமே சரியில்லையா... தனுஷுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? - கடும் கோபத்தில் ரசிகர்கள்

OTT movie actor dhanush Maaran fans-angry
By Nandhini Feb 28, 2022 09:04 AM GMT
Report

கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. இதனால், பல படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது கொரோனா குறைந்ததால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

தியேட்டர்களும், மால்களும் திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மாளவிகா மோகனன் நடித்த ‘மாறன்’ படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை டுவிட்டரில் எமோஜி வெளியிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த நடிகர் தனுஷ் ரசிகர்கள், இது என்ன பெரிய உருட்டாக இருக்கிறது. தற்போது கொரோனா பிரச்சினையும் இல்லை. எல்லா தியேட்டர்களும் திறக்கப்பட்டு விட்டன.

ஆனால், ‘மாறன்’ படம் மட்டும் ஏன் ஓடிடியில்தான் வருமா என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கொதித்தெழுந்துள்ளனர். நாங்கள் எமோஜி கேட்டோமா, படத்தை தியேட்டரில் வெளியிடுங்க சார் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், தனுஷ் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை கிண்டலடித்து வருகின்றனர்.