தனுஷ் முன்பு போல இல்ல... கண்டுக்கவே மாட்றாரு... - புலம்பித் தள்ளும் அந்த பிரபலம்
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் இவர் ஐஸ்வர்யாவை விவாகரத்து பெற்று பிரிந்து வாழப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மாளவிகா மோகனன் நடித்த ‘மாறன்’ படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.
என் தலைவனை நாங்கள் தியேட்டரில்தான் பார்க்க விரும்புகிறோம்.. ஆதனால் ‘மாறன்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ‘மாறன்’படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் மாஸான காட்சிகளில் நடிகர் தனுஷ் அசத்தியிருக்கிறார்.
இதனையடுத்து, ‘மாறன்’ படத்தை OTTயில் வெளியிட தனுஷ் தான் சிபாரிசு செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், மாறன் படப்பிடிப்பின் போதே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும், தனுஷிற்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாம்.
மேலும் இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் படத்தின் மேல் நம்பிக்கையே இல்லையாம். எனவே, இப்படம் திரையில் வெளியிட்டால், வெற்றிபெறுமா என்ற சந்தேகம் தனுஷிற்கு எழுந்ததால், இப்படத்தை OTTயில் வெளியிட முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீப காலமாக இப்படம் குறித்த வதந்திகள் சமூகவலைத்தளங்களில் உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால், தனுஷோ இப்படத்தைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடாமல் இருந்து வருகிறாராம்.
மேலும், ‘மாறன்’ படத்தை தனுஷ் கண்டுகொள்ளவில்லை என்று இப்படக்குழுவினர் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனராம்.
ஏற்கெனவே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’, ‘அத்ராங்கி ரே’ படங்கள் கொரோனா காரணமாக OTTயில் வெளியானது குறிப்பிடத்தக்கது.