மருமகன் தனுஷூக்கு மாமனார் ரஜினி கொடுத்த கிஃப்ட் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
மாமனார் ரஜினிகாந்த் கொடுத்த கிஃப்ட்டை நடிகர் தனுஷ் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் நேற்றுமாலை வெளியானது. இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.
இதனை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட பதிலுக்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் தனது மூத்த மருமகனான தனுஷை மகன் என பல இடங்களில் தெரிவித்துள்ள ரஜினி அவருக்கு இமய மலையில் இருந்து ருத்ராக்ஷ மாலை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். தனுஷ் அந்த மாலையை அணிந்திருக்கும் போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி வந்தது. ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்த பின்னர் தனுஷ் கழுத்தில் அந்த மாலையை காண முடியவில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் அத்தகைய ருத்ராக்ஷ மாலையை அணிந்திருந்தபடி வெளியான போட்டோ ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.