நடிகர் தனுஷ் செய்வது அயோக்கியத்தனம் - பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு..!

Dhanush
By Thahir May 31, 2022 12:24 AM GMT
Report

நடிகர் தனுஷுக்கு செய்வது அயோக்கியத்தனம் இவர் செய்கிற அக்கிரமத்திற்கு அளவு இல்லை என பிரபல தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் அண்மை காலமாகவே பல சிக்கலில் சிக்கி கடும் மன உளைசலுக்கு உள்ளாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

நடிகர் தனுஷ் செய்வது அயோக்கியத்தனம் - பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு..! | Dhanush Is Doing Nonsense Producer K Rajan

கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக சமூகவளைத்தளத்தில் தெரிவித்திருந்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்திலும்,குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து தனுஷுக்கு சோதனை காலமாக மாறிவிட்டது.அவர் நடித்த மாறன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி அதில் அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். மேலும், தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேனும் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.

நடிகர் தனுஷ் செய்வது அயோக்கியத்தனம் - பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு..! | Dhanush Is Doing Nonsense Producer K Rajan

அவர் குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டி ஒன்றில் அப்போது, கர்ணன், அசுரன் படத்தின் மூலம் தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவர் மேல் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் தமிழில் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு முடிய 20 நாள்களே இருந்த நிலையில் ஹிந்தியில் வாய்ப்பு தேடி வர தமிழில் நடித்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு ஹிந்திக்கு ஓடி விட்டார்.

அப்போ இந்த தமிழ் படத்தை நம்பி பணம் போட்டவர் கதி? இதெல்லாம் எவ்ளோ அயோக்கியத்தனம்? இது தயாரிப்பாளருக்கு செய்யும் துரோகம் இல்லையா?

இவர் செய்கிற அக்கிரமத்திற்கு அளவு இல்லையா? இந்த மாதிரி செயல்களை எல்லாம் விட்டு விட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகுக்க வேண்டும். என்று பேசினார்.