தனுஷ் ஒரு விஞ்ஞானி புகழ்ந்து பேசிய பிரபல தயாரிப்பாளர்...!
நடிகர் தனுஷ் ஒரு விஞ்ஞானி என பிரபல தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்.
பல்வேறு கதாபாத்திரங்களில் மக்களின் ஆதரவை பெற்றவர் ஆவார். பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அண்மையில் வெளியான மாறன் திரைப்படம் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகமாகவிருக்கிறார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளதன் மூலம் அவர் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.
அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதை படக்குழுவினர் கொண்டாடினர்.
அதைத்தொடர்ந்து கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் தாணு இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றியும் தனுஷை பற்றியும் பேசியுள்ளார்.
அவர் கூறியது, மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் பின்பு தான் என்னிடம் மாரி செல்வராஜை அனுப்பி அவரிடம் கதை கேட்க சொன்னார். அப்போது மாரிசெல்வராஜ் கர்ணன் படத்தின் கதையை புத்தகமாக என்னிடம் கொடுத்தார்.
அப்போது படிக்கும் போதே தெரிந்துவிட்டது இது சாதாரண கதையல்ல மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிற படமென்று.
எனவே மாரி செல்வராஜ் என்ற ஒப்பற்ற இயக்குனரை கண்டெடுத்த விஞ்ஞானி தனுஷ் என அவர் கூறினார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படம் வெளியாகும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.