நிம்மதியா இருக்கலாம்ன்னு போனா... இளையராஜா கேள்வியால் நொந்துபோன தனுஷ்
இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் நடிகர் தனுஷ் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. ராக் வித் ராஜா என பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் தாலாட்டு பாடல் ஒன்றை பாடி அசர வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் வள்ளி திரைப்படத்தில் வரும் மெலோடி பாடலான என்னுள்ளே என்னுள்ளே பாடல் பாடப்பட்டது.இதன்பின் தனுசை எழுந்திருக்கும் படி கூறியதுடன் உனக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கா என்று இளையராஜா கேட்டார். தனுஷ் ஆமாம் என்று சொல்ல இந்த பாடலின் மகத்தான வெற்றிக்கு உங்க மாமனார் ரஜினி தான் காரணம் என்று கூறினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் மௌனமாக சிரித்துவிட்டு ஆமாம் என தலை ஆட்டியபடி அமைதியாய் இருந்தார். ஏற்கனவே விவகாரத்து நிகழ்வு, பட தோல்வி ஆகியவற்றால் மன உளைச்சலில் உள்ள தனுஷ் நிம்மதியை தேடி இசை நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இளையராஜா இப்படி கேட்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.