சூப்பர் அண்ணி...வாழ்த்துக்கள் - ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளும் தனுஷ் ரசிகர்கள்...!
நடிகர் தனுஷ் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர்.
காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா தன் கெரியரில் படுபிசியாகிவிட்டார்.
அவர் கையில் இரண்டு பாலிவுட் படங்கள் உள்பட 3 படங்கள் இருக்கிறது. ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் தான் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வைலதளத்தில் வெளியிட்டு ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது, இந்த கோடை காலத்தில் விலங்குகள், பறவைகளுக்காக ஒரு கோப்பையில் தண்ணீர் வைக்கும் #waterbowlchallenge2022-ல் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி.
பறவைகள், விலங்குகளின் தாகத்தை தீர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
இயற்கையை காக்க நம் பங்கை செய்வோம் என்றார். அவரின் போஸ்ட்டை பார்த்துவிட்டு தனுஷ் ரசிகர்கள் தான் முதல் ஆளாக வாழ்த்தியுள்ளனர. அவர்கள் கூறியிருப்பதாவது,
சூப்பர் அண்ணி. கண்டிப்பாக பறவைகள், விலங்குகளுக்கு தண்ணீர் கொடுப்போம். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்களும் ஐஸ்வர்யாவை வாழ்த்தியுள்ளனர். மேலும் மண்பாண்டத்தில் தண்ணீர் வைத்தால் நல்லது என கூறியுள்ளனர்.
சிலரோ, அதற்குள் திருஓடு ஏந்திவிட்டீர்களா என கிண்டல் செய்திருக்கிறார்கள்.