“ஐஸ்வர்யாவின் எளிமை தான் என்னை கவர்ந்தது” - மனம் திறந்த நடிகர் தனுஷ் ; வைரலாகும் பேட்டி

viral actor dhanush divorce issue aishwarya rajinikanth dhanush interview about wife
By Swetha Subash Jan 29, 2022 11:40 AM GMT
Report

கடந்த ஜனவரி 17-ந் தேதி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி பிரிந்து வாழப்போவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

அந்த அறிக்கையில், “நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருந்தோம்.. வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என பயணம் இருந்தது.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.

நானும் ஐஸ்வர்யாவும் ஜோடியாகப் பிரிந்து தனிமனிதர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து எங்கள் முடிவை மதித்து, இதைச் சமாளிக்கத் தேவையான தனியுரிமையை எங்களுக்குத் தாருங்கள்.

ஓம் நம சிவாய. அன்பைப் பரப்புங்கள்." என தனுஷ் பதிவிட்டிருந்தார்.

18 வருடங்கள் மகிழ்ச்சியான திருமணத்திற்குப் பிறகு, இருவரும் சமூக ஊடகங்களில் தங்கள் பிரிவை அறிவித்த செய்தி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யாவிடம் தன்னை ஈர்த்தது என்ன என்பதை வெளிப்படுத்தும் தனுஷின் பழைய பேட்டி இணையத்தில் வைரலானது.

ரஜினிகாந்தின் மகளின் எளிமை தன்னைக் கவர்ந்ததாக அந்த பேட்டியில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

"நான் ஐஸ்வர்யாவை அப்படிப் பார்க்கவில்லை. அவருடைய எளிமை எனக்குப் பிடிக்கும். அவருடைய அப்பா எளிமையானவர் என்று நீங்கள் நினைத்தால், ஐஸ்வர்யாவைச் சந்திக்கவும்.

அப்பாவை விட 100 மடங்கு எளிமையானவர் அவர்," என்று தனுஷ் கூறினார்.

மேலும், சமீபத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரிவு 'விவாகரத்து' அல்ல, 'குடும்பச் சண்டை' என்று அவர்களுக்கு நெறுங்கியவர்கள் மூலம் தகவல்கள் பரவின.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தனுஷின் தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா விவாகரத்து குறித்த வதந்திகளை மறுத்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததாக அவர் கூறினார்.

"இது பொதுவாக திருமணமான தம்பதிகளிடையே நடக்கும் குடும்பச் சண்டை" என்று கூறினார்.

தற்போது, ​​இந்த ஜோடி சென்னையில் இல்லை, ஹைதராபாத்தில் இருப்பதாகவும், மூத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் அவர்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

தற்போது தனுஷின் இந்த பேட்டி தான் இணையத்தை வட்டம் அடித்து வைரலாகி கொண்டு இருக்கிறது.