நம்ப வைத்து ஏமாற்றிய நடிகர் தனுஷ் - உடைந்து போன ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார். தனுஷை காட்டிலும் வயது அதிகமான ஐஸ்வர்யா தனுஷை தான் திருமணம் செய்வேன் என்று கூறி காதலித்து திருமணம் முடித்தார்.
18 ஆண்டுகளாக சேர்ந்து வந்த ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது தனது அப்பா கோபமாக இருப்பதை உணர்ந்த ஐஸ்வர்யா சேர்ந்து வாழலாம் என கெஞ்சியுள்ளார். அதற்கு தனுஷ் தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்,தனுஷிடம் பேசியுள்ளார் அப்போது கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க மாமா என்று கூறியுள்ளார்.
இதை நம்பி காத்திருந்த ரஜினிகாந்திற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.அண்மையில் ஐஸ்வர்யா இயக்கி வெளிவந்த முசாபில் ஆல்பம் பாடலுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அப்போது ஐஸ்வர்யா தோழி என குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை எனக் கூறி தனது பெயருக்கு பின் இருந்த தனுஷின் பெயரை நீக்கியுள்ளார்.
இதனால் உடைந்து போன ரஜினிகாந்த் தனுஷின் வார்த்தையை நம்பி காத்திருந்த நிலையில் அவருக்கு இந்த செயல்கள் ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனது நம்பிக்கையை தனுஷ் தகர்த்துவிட்டாரே என நெருக்கமான வட்டாரத்தில் ரஜினிகாந்த் வருத்தப்படுவதாக கூறப்படுகிறது.