40 வயசாச்சு; இனி லவ் எல்லாம் செட்டாகாது - தனுஷ் திடீர் முடிவு!

Sumathi
in பிரபலங்கள்Report this article
40 வயதாகிவிட்டதால் தனுஷ் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி உள்ளிட்டோர் நடித்த வெளியான படம் தான் மரியான். இந்தப் படம் ரிலீஸாகி 10 ஆண்டுகளாகிவிட்டது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வந்த அனைத்து பாடலுமே பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தது.
இந்நிலையில், 10 ஆண்டுகள் ஆனதையொட்டி பரத்பாலா, தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இன்ஸ்டா லைவில் வந்து பேசினார்கள். அதில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதில், மரியான் போன்ற காதல் கதை கொண்ட படங்களில் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும்.
மரியான் - 100
அதை நாங்கள் பார்க்க வேண்டும் என தெரிவித்தார் பரத்பாலா. அதற்கு தனுஷ் சிரித்துக் கொண்டே, எனக்கு 40 வயதாகிவிட்டது. இனி காதல் படமெல்லாம் செட் ஆகாது. அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும் எனத் தெரிவித்தார். இந்த பதில் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தற்போது அவர் டி50 படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதில், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் படத் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.