எல்லாத்துக்கும் என் அப்பாதான் காரணம் : நடிகர் தனுஷ் ஓபன் டாக்.

hotel dhanush aishwarya hyderabad
By Irumporai Jan 24, 2022 05:58 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் அவர்கள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா இருவரும், திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில் தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாக ஜனவரி 17ம் தேதி தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர்.

இதனால் சோஷியல் மீடியா, மீடியா என அனைத்தும் பரபரப்பாகின. அவர்களின் முடிவு வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். இருவரும் தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பிரபலங்களும், ரசிகர்களும் கேட்டுக் கொண்டனர்.

எல்லாத்துக்கும் என் அப்பாதான் காரணம் :  நடிகர் தனுஷ் ஓபன் டாக். | Dhanush And Aishwarya Stay Hotel In Hyderabad

இந்த நிலையில், பிரிவை அறிவித்த இருவருமே தற்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்ஷனில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

எல்லாத்துக்கும் என் அப்பாதான் காரணம் :  நடிகர் தனுஷ் ஓபன் டாக். | Dhanush And Aishwarya Stay Hotel In Hyderabad

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட போகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளதாம்.இதற்காக முன்கூட்டியே தனது வேலைகளை கவனிக்க தான் ஐஸ்வர்யா ஐதராபாத் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

எல்லாத்துக்கும் என் அப்பாதான் காரணம் :  நடிகர் தனுஷ் ஓபன் டாக். | Dhanush And Aishwarya Stay Hotel In Hyderabad

இந்த சூழ்நிலையில், ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் பங்கேற்கும் வேலைகள் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தான் நடக்கிறதாம்.

இதனால் பிரபலங்கள் தங்குவதற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் அறையில் தான் இருவருமே தங்கி உள்ளதாகவும் ஆனால் வெளியில் வரும் போதோ, போகும் போதோ இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா, பேசிக் கொண்டார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்தஇந்நிலையில் தான் சினிமாவிற்கு வந்தது எப்படி என தனுஷ் பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. அதில் தான் நடிப்பில் எந்த வித ஆர்வமும் இல்லாமல் இருந்ததாகவும், என் அப்பாதான் என்னை ஒரு நடிகனாக்க ஆசைப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் என் உடல் வாகிற்கு நடிப்பு சுத்தமாக செட் ஆகாது என்று சொன்னேன், ஆனால் என் அப்பாதான் எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை கண்டுபிடித்து என்னை நடிக்கவைத்தார்.

எல்லாத்துக்கும் என் அப்பாதான் காரணம் :  நடிகர் தனுஷ் ஓபன் டாக். | Dhanush And Aishwarya Stay Hotel In Hyderabad

அவருக்கு எப்படி நான் நடிகனாவேன் என்ற நம்பிக்கை வந்தது என எனக்கு இன்றுவரை தெரியவில்லை. குறிப்பாக சொல்லப்போனால் என் அப்பா கஸ்தூரிராஜா வற்புறுத்தியதால் தான் நான் நடிக்கவந்தேன் என்று கூறியிருக்கிறார்.

சினிமா துறையில் ஒரு நடிகனாக மட்டுமில்லாது பன்முகத்திறன் கொண்டவராய் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவரும் தனுஷ் உள்ளே ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்று கண்டறிந்த கஸ்தூரி ராஜாவை ரசிகர்கள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.