அமெரிக்காவில் தனுஷை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா? - வெளியான தகவலால் பரபரப்பு
படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றபோது தனுஷை முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அசிங்கப்படுத்திய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த வாரம் இருவரும் இல்வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு திடீரென எடுக்கப்பட்டது இல்லை என கூறப்பட்டது.
இதனிடையே நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்புக்காக தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இருவரையும் உடன் அமெரிக்கா அழைத்து சென்றார். தனுஷ் படப்பிடிப்பில் இருந்தப்போது அவருடைய செல்போன் ஐஸ்வர்யாவிடம் இருந்ததாகவும், அதில் சில நடிகைகளிடம் இருந்து அழைப்பு வந்து அதனை ஐஸ்வர்யா எடுத்து பேச முயன்ற போது போன் கால் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதன் காரணமாகவே அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகும் இருவருக்குள்ளும் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் இருவரும் பிரிந்தே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தான் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.