தனுஷை காண்டாக்கிய போயஸ் கார்டன் வீடு பிரச்சினை? - ரஜினி யாருக்கு எழுதி கொடுத்துள்ளாருன்னு தெரியுமா?
ரஜினியின் போயஸ் கார்டன் வீடுதான் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதாக அறிவித்தனர். இவர்களது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகம் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து இவர்கள் பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் குறித்து தினமும் சமூகவலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால், இருவரும் பிரிந்து வாழ்வதில் ரஜினிக்கு உடன்பாடு கிடையாது. எனவே, கணவருடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று மகள் ஐஸ்வர்யாவுக்கு ஆர்டர் போட்டுள்ளார் ரஜினி.
அப்பாவின் இன்னொரு முகத்தை பார்த்து மிரண்டு போன ஐஸ்வர்யாவும் தனுஷிடம், அவசரப்பட்டுவிட்டேன், அப்பாவுக்காக நாம் சேர்ந்து வாழலாம் என கெஞ்சியிருப்பதாகவும், ஆனால் தனுஷ் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் இடையிலான பிரச்சனைக்கு போயஸ் கார்டன் வீடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் கார்டன் வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைய மகளுக்கு எழுதி கொடுத்துள்ளாராம் ரஜினிகாந்த்.
அதேநேரத்தில் தனது மூத்த மகளும் அருகிலேயே இருக்கவேண்டும் என போயஸ் கார்டனிலேயே அவர்கள் வீடு கட்டவும் ஏற்பாடு செய்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். வீடு கட்ட பூஜை போடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வரும் நிலையில்தான் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே நடிகர் தனுஷுக்கு போயஸ் கார்டன் வீட்டின் மீது ஒரு கண் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வீட்டை தனது இளையமகளுக்கு ரஜினி எழுதி கொடுப்பார் என சற்றும் எதிர்பார்க்காத தனுஷுக்கு அந்த விஷயம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தான் எதிர்பார்த்த அந்த பெருமைமிக்க வீடு கைவிட்டு போனதால் விரக்தியில் இருந்து வந்துள்ளார் தனுஷ். அதன்பிறகுதான் இருவருக்கும் இடையிலான மோதலும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
போயஸ் கார்டன் வீடுதான் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே இருந்த பிரச்சனை பிரிவு வரை வருவதற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
You May Like This

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
