ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க சமரசம் பேசுபவர்களை புறக்கணிக்கும் நடிகர் தனுஷ்
ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க சமரசம் பேசுபவர்களை நடிகர் தனுஷ் புறக்கணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ் ஆரம்ப கட்டத்தில் பல விமர்சனங்களை சந்தித்தார்.
இந்நிலையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து வெற்றி வாகை சூடினார் நடிகர் தனுஷ். இதையடுத்து சமீபத்தில் தனுஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் OTTயில் வெளியாகி வருகிறது.
கடந்தாண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் OTT யில் வெளியானது. அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் தனுஷ் இணைந்து நடித்த அத்ராங்கி ரே படமும் OTT யில் வெளியானது.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் படமும் OTT யில் வெளியாகி ஹாட்ரிக் அடிக்கவுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் கடந்த மாதம் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து நாளுக்கு நாள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்த தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தஙகள் வேலைகளில் பிஸியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. வாத்தி படப்பிடிப்புக்கு பின் தனுஷ் சற்று ஓய்வில் உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருந்து வந்த நடிகர் தனுஷ் தற்போது எல்லாம் சீரியசாக இருந்து வருகிராறாம்.
மேலும் தனுஷிடம் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க சமரசம் பேசுவோர்களிடமும் அளவாகவே பேசி ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாக தெருவிக்கின்றாராம்.
இனி தன் முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தவுள்ள தனுஷ் மேலும் வளர்ச்சியை காண திட்டமிட்டுவருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.