எச்சரித்த நடிகர் தனுஷ்...பதற்றத்தில் ரஜினிகாந்த் குடும்பம்..!
நடிகர் தனுஷ் பிரஸ் மீட் வைக்கப்போவதாக தனுஷ் கூறியிருந்த நிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கடும் பதற்றத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளன.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும் குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தனுஷை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் லதா ரஜினிகாந்த் இருந்து வந்தார்.
வாழ்க்கையை கேள்வி குறியாக்கிய தனுஷுக்கு எதிராக பல மறைமுக வேலைகளை செய்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனுஷுக்கு யாரும் பட வாய்ப்புகளை கொடுக்க கூடாது என தயாரிப்பாளர்களையும்,இயக்குநர்களை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நடிகர் தனுஷ் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து தனுஷ் திரைப்படத்தை இயக்கும் பணியில் இறங்கினார்.
அதற்கும் லதா ரஜினிகாந்த் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நடிகர் தனுஷ்,இனியும் தன்னை சீண்டினால் பிரஸ் மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் சொல்லிவிடுவேன் என தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத ரஜினி குடும்பம்,அவரை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து விடலாம் என எண்ணி கொண்டு இருந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா குறித்தான சர்ச்சைக்குரிய செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரஸ் மீட்டில் ஐஸ்வர்யா குறித்து ஏதேனும் உலறி விடுவாரோ என பதற்றத்தில் உள்ளாதாக கூறப்படுகிறது.