ஹைதராபாத் ஹோட்டலில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா இடைய பயங்கர சண்டை - வெளியான பரபரப்பு தகவல்
ஹைதராபாத் ஹோட்டலில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 17ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம்.
தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் எதற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்ன காரணம் என அனைவரும் யோசித்த நிலையில் தற்போது அதற்கான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஹைதராபாத் ஹோட்டலில் நடந்த இரவு பார்டியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷும்,ஐஸ்வர்யாவும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது ஒருத்தரை ஒருத்தர் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.பின்னர் அன்று இரவு பிரபலம் ஒருவர் சமாதானம் செய்ய முயற்சித்ததாகவும் ஆனால் அவர்களின் வாக்கும் வாதம் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் தங்களது அறைக்கு சென்றுள்ளனர்.இதையடுத்து ஐஸ்வர்யா நடிகர் தனுஷுக்கு போன் செய்து மீண்டும் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இதையடுத்து இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர்.மறுநாள் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் நேற்று இரவு பேசியது எல்லாம் உண்மை தானே என்று கேட்டாராம்.
அதற்கு ஐஸ்வர்யாவோ, ஆமாம், இனியும் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்தாராம். அதன் பிறகே தனுஷ் பிரிவு குறித்து ட்வீட் செய்ய, ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டாராம்.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். நீ தனுஷுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஐஸ்வர்யாவுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் ரஜினி.
You May Like This