ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்வது தான் தனுஷுக்கு நல்லது - பிரபல திரைப்பிரபலம் வேண்டுகோள்..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளன.இவர்கள் தாயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி தோற்றுவிட்டது.
தான் தனுஷுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்திடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல நடிகரும் திரைபிரபல விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இவர்களின் குறித்து பேசியுள்ளார்.
தனுஷ் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல தந்தை, மகன். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அசுரன் படம் வெளியான பிறகு இந்திய அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
விவாகரத்து விஷயத்தால் ரசிகைகளை இழந்துவிடுவார் தனுஷ். அதனால் அவர் ஐஸ்வர்யா ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது தான் நல்லது என தெரிவித்துள்ளார்.