நம்ம நினைச்சது நடந்திருச்சு மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ் - கடுப்பில் ஐஸ்வர்யா..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமூக வலைதள பக்கத்தில் பிரிவதாக அறிவித்திருந்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும்,நண்பர்களும் முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியை தழுவின.தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் சந்தோஷமாக வாழ்வதாக தனது தந்தை கஸ்துாரி ராஜாவிடம் தனுஷ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தனது அப்பா கஸ்துாரி ராஜாவிடம் தன்னை மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளார் தனுஷ்.
இதனிடையே ஐஸ்வர்யா இயக்கிய பயணி வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் தனுஷ். அவரின் வாழ்த்து செய்தியில் மனைவி ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டிருந்தார்.
அதை பார்த்து கடுப்பான ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேரவே கூடாது என்று ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தான் நினைத்தது நடந்து விட்டதாக நடிகர் தனுஷ் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.