ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்ததற்கு பின் நிம்மதியாக இருக்கிறேன் - நடிகர் தனுஷ்

Dhanush Divorce Happy Aishwarya After
By Thahir Feb 05, 2022 09:26 AM GMT
Report

நடிகர் தனுஷ் தனது காதல் மனைவியும் ரஜினிகாந்தின் அன்பு மகளுமான ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்ததற்கு பின்பு தான் நிம்மதியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார்.

அவரின் அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்தநிலையில் தனுஷ் சற்று மாற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அவர் தனது படப்பிடிப்பு தலங்களில் மகிழச்சி இல்லாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் தனுஷ் தன்னை காண வரும் நண்பர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை காண வரும் நண்பர் ஐஸ்வர்யாவை பற்றி பேச கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளாராம். இதையும் மீறி கருத்து தெரிவிக்கும் நண்பர்களிடம் இருந்து நடிகர் தனுஷ் விலகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்ததற்கு பின்பு தான் மிக்க மகிழ்ச்சியாக இருந்து வருவதாக கூறியுள்ளாராம்.