திடீரென்று மாறிவிட்ட நடிகர் தனுஷ் - ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் இப்படிதான் நடந்து கொள்கிறாராம்?
சமீபத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், நடிகர் தனுஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ ஆசைப்பட்டாலும், தனுஷ் வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பிரிவு அறிவிப்புக்கு பிறகு தனுஷின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் தற்போது ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் ‘சார்’ என்ற தலைப்பில் உருவாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஆனால், படப்பிடிப்பில் தனுஷ் நடந்துகொள்ளும் விதம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இதற்கு முன்பெல்லாம் ரொம்ப கலகலப்பாக இருப்பாராம் தனுஷ், ஆனால், இப்போதெல்லாம் நடிகர் தனுஷ் எல்லாரிடமும் எப்போதுமே கடுகடுவெனவே இருக்கிறாராம்.
செட்டுக்குள் நுழைந்ததும் என்ன விஷயமோ அதை மட்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிவிட்டு கேரவனுக்குள் சென்று விடுகிறாராம். என்ன வேலையோ அதை மட்டும் செய்யும் தனுஷ், ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் பழையப்படி பேசுவது கிடையாதாம். மேலும், தன்னிடம் பேச வருபவர்களிடமும் முகம் கொடுத்து பேசுவது கிடையாதாம்.
காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்ததிலிருந்து அவர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தனுஷுக்கு பட வாய்ப்புகளை கொடுக்க கூடாது என்று மாமியார் ஒரு பக்கமும், என் அப்பா காலா படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை கொடு மனைவி ஒரு பக்கமும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த கடுப்பில்தான் தனுஷ் இப்படி சிடுசிடுவென மாறிவிட்டாரா என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே எப்படியும் தனுஷ் மனதை மாற்றிவிடலாம் என நம்பிக்கையில் உள்ள கஸ்தூரி ராஜா தொடர்ந்து தனுஷிடம் பேசி வருகிறாராம். நடிகர் தனுஷின் பிள்ளைகள் தற்போது ரஜினிகாந்திடம் உள்ளனர்.