நீண்ட நாட்களுக்குப் பிறகு கவலையை மறந்து சிரித்த ரஜினி - லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
இவர்களின் அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
18 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இந்த விவாகரத்து அறிவிப்பை அறிவித்துள்ளனர். இவர்களு இரு மகன்கள் உள்ளனர்.
யார் பேச்சையும் கேட்காமல் விவாகரத்து அறிவிப்பை அறிவித்த ஐஸ்வர்யா மேல் நடிகர் ரஜினிகாந்த் கடும் கோபமடைந்தார். செல்ல மகளான ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்தார் ரஜினி. அப்பாவை கோபத்தைப் பார்த்த ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், தனுஷ்தான் பிடிவாதமாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி சிரித்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தலைவா.. நீங்க இப்படியே இருக்கணும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Recent clicks of Superstar #Rajinikanth.#Thalaivar169 pic.twitter.com/YiWp4FQNK8
— Manobala Vijayabalan (@ManobalaV) February 18, 2022