லதா ரஜினிக்கு செய்ததையே... தனுஷுக்கு செய்த ஐஸ்வர்யா... - வெளியான தகவலால் ஷக்கான ரசிகர்கள்

dhanush aishwarya latha rajinikanth தனுஷ் ஐஸ்வர்யா ரஜினி broke-up rajinikanth-upset விவாகரத்து லதா ரஜினிகாந்த்
By Nandhini Mar 02, 2022 07:48 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ஒரு பார்ட்டியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள். ஆனாலும், இவர்கள் இருவரும் முகம் கொடுத்து பேசவில்லை. பார்ட்டி முடிந்ததும், நண்பர்களுடன் சேர்ந்து கிளம்பிவிட்டனர். இந்த தகவல் வெளியானதால், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

லதா ரஜினிக்கு செய்ததையே... தனுஷுக்கு செய்த ஐஸ்வர்யா... - வெளியான தகவலால் ஷக்கான ரசிகர்கள் | Dhanush Aishwarya Broke Up Rajinikanth Upset Latha

இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் தற்போது ஒரு தகவல் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் தனுஷை, அவரது குடும்பத்தினரிடமிருந்து ஐஸ்வர்யா பிரித்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு எந்தவித நல்லது கெட்டது என்று எதுவும் செய்யக்கூடாது என்று அவர் ஆர்டர் போட்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தன்னுடைய அண்ணன் அண்ணன், அக்கா மற்றும் பெற்றோருக்கு தனுஷ் உதவ நினைத்தாலும், அதற்கு தடை போட்டாராம் ஐஸ்வர்யா. இதனால் தனது அண்ணன் கஷ்டப்பட்ட பல நேரங்களில் ஐஸ்வர்யாவுக்கு தெரியாமல் நடிகர் தனுஷ் உதவி செய்து வந்துள்ளாராம். இதை அறிந்ததும் தனுஷிடம் பலமுறை சண்டையிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா.

இதேபோல் தான், நடிகர் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்த பிறகு லதாவும் இப்படிதான், ரஜினியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டாராம். தாயின் வழியை பின்பற்றி, மகளும் அதே காரியத்தை செய்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.