அந்த விஷயத்தில் தனுஷூற்கு அதிக விருப்பமாம்.. ஆனால் ஐஸ்வர்யாவிற்கு இல்லையாம்... - வெளியான தகவல்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினியின் தீவிர ரசிகையாம். இதை அவரே பலமுறை தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தன் அப்பாவைப் பற்றி ஐஸ்வர்யாவிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அப்பாவை வைத்து படம் இயக்க ஆசை இருக்கிறதா என்று கேள்வி ஒன்று ஐஸ்வர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அப்பாவை இயக்குவது பற்றி நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. அப்பாவின் தீவிர ரசிகை நான். அதில் எனக்கு எப்போதுமே சந்தோஷம். ஆனால், அப்பாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.
தனுஷும் ரஜினியின் தீவிர ரசிகர்தான். அவருக்கு தன் தலைவரை வைத்து படம் இயக்க அவ்வளவு ஆசை வைத்துள்ளாராம்.
ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு தனுஷுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைப்பது நடக்காத காரியமாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.