அக்கா மாதிரியே நானும் பண்ணப்போறேன்ப்பா... - சவுந்தர்யா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா அடுத்தடுத்து படங்களில் பிசியாவதை பார்த்த சவுந்தர்யாவுக்கும் படத்தை இயக்கும் ஆசை வந்துள்ளதாம். ஆனால், இவரின் ஆசைக்கு கணவர் விசாகனின் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை.
இதனையடுத்து அப்பா ரஜினியிடம் சவுந்தர்யா நாசூக்காக பேசியுள்ளாராம். அக்கா மாதிரியே நானும் படம் இயக்கப் போகிறேன்ப்பா என்று கூறியதைக் கேட்டு ரஜினி அதிர்ச்சி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இரு மகள்களும், குடும்பத்தை கவனித்துக் கொண்டு நல்லபடியாக வாழந்தாலே போதும் என்று ரஜினி விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.