‘இனி... என்னை சீண்டினால்.. சந்தி சிரிக்க வச்சுடுவேன்...’ - போனில் மிரட்டிய தனுஷ்? ஷாக்கான ரசிகர்கள்

dhanush aishwarya latharajinikanth broke-up rajinikanth-upset phone-call fansshocked
By Nandhini Apr 02, 2022 08:56 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தன் மகள் வாழ்க்கையை கெடுத்த தனுஷ்ஷை சும்மா விட மாட்டேன் என்று லதா ரஜினிகாந்த் முடிவெடுத்ததாக தகவல் வெளியானது.

மேலும் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தனுஷை வைத்து படம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, தனுஷுக்கும் தற்போது புதிய படங்களுக்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ரஜினி குடும்பத்தினரிடம் பேசியுள்ளாராம் தனுஷ். நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறேன். தேவையில்லாமல் என்னை சீண்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

இனிமேலும் நீங்கள் என் வழியில் குறுக்கிட்டால் பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விடுவேன் என்றும், நான் வெளியில் சொன்னால், உங்கள் குடும்ப மானம்தான் போகும் என்றும் தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இப்படி பேசியதால் ரஜினி குடும்பத்தார் வாயடைத்து போயுள்ளனராம்.

தனுஷ் பிரஸ் மீட் வைக்கப்போவதாக கூறிய இந்த தகவல்தான் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

You May Like This