‘என் நிம்மதியே போய்விட்டதே....’ - மனதளவிலும், உடலளவிலும் நொறுங்கும் ஐஸ்வர்யா...

dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா ரஜினி broke-up rajinikanth-upset வேதனை
By Nandhini Mar 08, 2022 09:05 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

‘என் நிம்மதியே போய்விட்டதே....’  - மனதளவிலும், உடலளவிலும் நொறுங்கும் ஐஸ்வர்யா... | Dhanush Aishwarya Broke Up Rajinikanth Upset

என் கையில் வேலை இருக்கு.. யாருடைய தயவும் எனக்கு வேண்டாம் என்பது போல் காட்டிக்கொண்டாலும், தனுஷை நினைத்து நினைத்து அவர் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளாராம்.

ஒரு பக்கம் கணவரை பிரிந்த ஏக்கம்... மறுபக்கம் அப்பாவை நினைத்து வருந்தம்... இதனால், நிம்மதி இல்லாமல் மனது பலவீனமடைந்து, உடலிலும் பலவீனமடைந்துள்ளார் ஐஸ்வர்யா..

இதனால் தான் அடிக்கடி ஐஸ்வர்யாவுக்கு உடலில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துக்கொண்டிருக்கிறது.

ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டாலும் தனுஷ் அதற்கு தயாராக இல்லை. அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டோமே என்று தினமும் வேதனைப்பட்டு வருகிறாராம் ஐஸ்வர்யா.

தனுஷ் பழையப்படி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் ஐஸ்வர்யா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.