‘என் மகளை அங்க கூட்டிக்கிட்டு போகாம இருந்திருந்தால் இவங்க கல்யாணம் நடந்திருக்காதுப்பா...’ - ரஜினி உருக்கம்

rajini dhanush aishwarya upset தனுஷ் ஐஸ்வர்யா ரஜினி broke-up வேதனை
By Nandhini Feb 17, 2022 06:22 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சமூகவலைத்தளத்தில் விவாகரத்து வாங்கி பிரியப்போவதாக அறிவித்தனர். இவர்களது அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

18 வருடங்கள் கழித்து இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரையும் சேர்த்து வைக்க உறவினர்கள், நண்பர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவ்வப்போது தன் நண்பர்களிடம் மட்டுமே பேசிவருகிறார் ரஜினி. அப்போது பேசும்போது தனது ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறாராம்.

‘என் மகளை அங்க கூட்டிக்கிட்டு போகாம இருந்திருந்தால் இவங்க கல்யாணம் நடந்திருக்காதுப்பா...’ - ரஜினி உருக்கம் | Dhanush Aishwarya Broke Up Rajinikanth Upset

‘காதல் கொண்டேன்’ படத்தை படக்குழு ரஜினிக்கு பிரத்யேகமாக போட்டு காட்டியது. அப்போது ரஜினி தன் மகள் ஐஸ்வர்யாவுட ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அப்போதுதான் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் முதன்முதலாய் பார்த்துள்ளார்.

பிறகு ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்த பிறகு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யாவை கவர்ந்து விழுந்தார். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் பழக ஆரம்பித்தனர்.

இது குறித்து ரஜினி, நான் மட்டும் ஐஸ்வர்யாவை அந்த படத்திற்கு அழைத்து செல்லாமல் இருந்திருந்தால் இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.. இது போன்ற பிரச்சினைகள் என் மகள் வாழ்க்கையில் நடந்திருக்காது... ஊடகங்களில் என் மகளுடன் நடிகர் தனுஷிற்கும் காதல் என்று எழுதத் தொடங்கினர். அதனால், அவசர அவசரமாக திருமணத்தை நடத்தி வைத்தேன் என்று ரஜினி என்று தன் நண்பர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

You May Like This