‘நானும் பொறுமையா இருக்கேன்... என் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க...’ - விரக்தியில் ரஜினி
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தெரிவித்தனர். இதனால், ஒட்டுமொத்த திரையுலகமும் கவலையில் ஆழ்ந்துள்ளது.
எப்படியாவது இருவரும் சேர்ந்து விடுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இருவரிடமும் பேசி வருகின்றனர்.
ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பால் நடிகர் ரஜினி மிகுந்த மனவேதனையில் உள்ளார். மிகவும் செல்லமாக வளர்த்த தன் மூத்த மகளின் விவாகரத்து செய்தியால் அவர் மனமுடைந்துள்ளார். இதனால், ரஜினி தன் குடும்பத்தினர் மீது கோபத்தில் உள்ளார்.
அப்பாவின் கோபத்தை கண்ட ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தனுஷ் தன்னுடைய விவாகரத்து முடிவில் உறுதியாக உள்ளார்.
இதனையடுத்து, ரஜினியே இந்த விஷயத்தில் இறங்கி இருக்கிறார். தனுஷிற்கு போன் செய்து பேசியுள்ளார் ரஜினி. அப்போது, நான் உங்கள் நலனுக்காகவும், உங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும் பேசுகிறேன்.
குழந்தைகளுக்காக உங்கள் கோபங்களை விட்டு மீண்டும் இணைந்து வாழ வேண்டும். தவறு யார் மீது வேண்டுமானாலும் இருந்து போகட்டும். அதை பேசி தீர்த்துக்கலாம்.
அதற்கு விவாகரத்து ஒரு முடிவாக இருக்காது என்று பேசியுள்ளார். ஆனால், தனுஷ் இந்த விஷயத்தில் மவுனமாகவே இருந்து வருகிறார். மாமனார் பேசியே, தனுஷ் இறங்கி வராததால் மிகவும் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி. இனி என்ன நடக்கப்போவது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
You May Like This